Saturday 18th of May 2024 09:42:59 PM GMT

LANGUAGE - TAMIL
-
மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு தடை கோரி பருத்தித்துறை நீதிமன்றில் மீண்டும் மனு! (2ஆம் இணைப்பு)

மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு தடை கோரி பருத்தித்துறை நீதிமன்றில் மீண்டும் மனு! (2ஆம் இணைப்பு)


இரண்டாம் இணைப்பு

மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்த தடைவிதிக்கக் கோரி பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை தற்போது நடைபெற்றுவருகிறது.

எதிராளிகள் சார்பில் சட்டத்தரணி நடராசா சுஜீவன் முன்னிலையாகியுள்ளார்.

வழக்கினை நாளை வரை ஒத்திவைக்குமாறு அவர் கோரிக்கைவிடுத்துள்ளார் என்று பருத்தித்துறை நீதிமன்றச் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

முன்னைய இணைப்

யாழ். வடமராட்சி பருத்தித்துறை நீதிமன்ற நியாயதிக்கத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நவம்பர் 25ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதி மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்த தடைவிதிக்கக் கோரி பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் பொலிஸாரால் மீளவும் விண்ணப்பங்கள் செய்யப்பட்டுள்ளன.

இன்று முற்பகல் தாக்கல் செய்யப்பட்ட இந்த விண்ணப்பங்கள் பிற்பகல் மன்றில் அழைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விண்ணப்பங்கள் பருத்தித்துறை, வல்வெட்டித்துறை மற்றும் நெல்லியடி ஆகிய 3 பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளால் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

பிரதிவாதிகளாக முன்னர் தாக்கல் செய்யப்பட்டு மீளப்பெறப்பட்ட விண்ணப்பங்களில் குறிப்பிடப்பட்டவர்களின் குறிப்பிடப்பட்டுள்ளன.

இதேவேளை, முன்னதாக 3 விண்ணப்பங்கள் கடந்த வியாழக்கிழமை பருத்தித்துறை நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டு நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை மீளப்பெறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: வட மாகாணம், பருத்தித்துறை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE